Thursday, November 15, 2007

ஏமாற்றம்



இந்தமுறையும்

ஏமாந்துபோனேன்,

அருகில் இருந்த ரயில்பெட்டி

நகர்ந்தபோது..

நகர்வது என்னுடையது

என்றெண்ணி..

Monday, November 12, 2007

எவ்வளவோ பண்றோம்.. அழகிய தமிழ்மகன்


தீபாவளிக்கு அடுத்த நாள் நண்பர் ஒருவருடன் அழகிய தமிழ்மகன் படம் பார்க்கப்போயிருந்தேன். இனிய தளபதி, இதய தளபதி, இளைய தளபதி, டாக்டர் விஜய் அப்புடின்னு பேர் போட்டதுலேருந்து படம் முழுக்க இந்தமாதிரி நிறைய காமெடிகள்.


ஓட்டப்பந்தயத்துல எல்லா மெடலையும் தானே வாங்குற வீரர் விஜய். ஒரு பந்தயத்துல, கூட ஓடுற ஒருத்தருக்காக ( ஸ்ரீமன்) முதலிடத்த விட்டுக்கொடுக்கிறார் விஜய். இத பார்த்தவுடனே உலகத்துலேயே இல்ல இல்ல தமிழ்நாட்டுலேயே பெரிய பணக்காரரோட பொண்ணு கதாநாயகிக்கு இவரு மேல காதல் வந்துடுது. . . .அதுக்காகத்தானே அந்த சீனே..


அப்புறம்தான் படத்தோட கதையே ஆரம்பிக்குது. பின்னாடி நடக்கப்போற சில விஷயங்கள் விஜய்க்கு, முன்னாடியே கண்ணாடி மாதிரி தெரியுது.. ( plz பொருத்துக்கங்க..). அதுனால விஜய் ரொம்ப டிஸ்டர்பு ஆகிறார். மனநல மருத்துவர் ருத்ரன் , இதுல கவலைப்படுறத்துக்கு ஒன்னும் இல்ல, உங்களுக்குள்ள ஒரு அபார சக்தி இருக்கு. இப்படி உங்களுக்கு தோன்ற விஷயங்கள் எல்லாம் கண்டிப்பா நடக்கும்னு சொல்லிறார். அதேபோல சக்திமானுக்கு (அதாங்க நம்ம விஜய் ) தோனுன ரெண்டு விஷயங்கள் உண்மையாவே நடந்துடுது...


இதுக்கிடையில விஜயோட காதல் வீட்டுக்கு தெரியவந்து எல்லாரும் கல்யாணத்துக்கு சம்மதிக்கிறாங்க. அந்தநேரத்துல விஜய்க்கு இன்னொரு விஷயம் தோனுது. அதாவது கதாநாயகிய இவரே கத்தியால குத்துறமாதிரி. இத யார்கிட்டேயும் சொல்லமுடியாம ஊரைவிட்டு மும்பைக்கு போறாரு.


அங்க போனவுடனே இவரு கண்ணையே இவரால நம்பமுடியல, ஆமாங்க.. அச்சு அசல் இவர்மாதிரியே இன்னொருத்தர், நடு ரோட்டுல பத்துபேர அடிச்சு, துவச்சுகிட்டு இருக்கிறார். ஒரிஜ்னல் டூப்ளீகேட்ட பிடிக்கிறத்துக்காக ஓடுறார், அதுக்குள்ள அவரு ஒரு கார்ல ஏறிப்போயிடுறார். நின்னுகிட்டு இருந்த ஒரிஜ்னல் மேல லாரி மோதிடுது.


அதுக்கப்புறம் நீங்க யூகிச்சமாதிரியே டூப்ளீகேட் சென்னைக்கு போறாரு. இரெயில்ல போகும்போது நமிதாகிட்ட ஜல்சா பண்ணிட்டு, அவுங்க முழிக்கிறத்துக்குள்ள காணாம போயிடுறார். இதெல்லாம் வச்சு இவரு ரவுடின்னு முடிவுக்கு வ்ந்துடாதீங்க. டூப்ளீகேட் பேங்குல வேலை பார்கிறாராம். இவரோட முக்கியமான டயலாக்தான் தலைப்புல நீங்க பார்த்தது, எவ்வளவோ பண்றோம் , இது பண்ணமாட்டோமா?

நாலு நாளா ஒரிஜ்னல தேடி அலைஞ்ச ஷிரேயா, டூப்ளீகேட்ட ஒரிஜ்னல்னு நினைச்சு வீட்டுக்கு கூட்டிட்டு போயிடுறாங்க..( என்னவொரு டிவிஸ்டு பார்த்தீங்களா) ஒருஜ்னலோட டைரிய கண்டுபிடுச்ச டூப்ளீகேட் அவர மாதிரியே நடிக்க ஆரம்பிக்கிறார்.
இந்தநேரத்துல மும்பையில ஒரு பெரிய ஆஸ்பத்திரியில ஓசியில வைத்தியம் பார்த்துக்கிட்டு இருக்காங்க ஒரிஜ்னல் விஜய்க்கு. டாக்டர் ஒருமாசத்துக்கு ரெஸ்டு எடுக்கனும், ரிஸ்கு எடுக்ககூடாதுன்னு சொல்றார், ஆனா ரிஸ்கு எடுக்குறதெல்லாம் எனக்கு ரஸ்கு சாப்புடுற மாதிரின்னு சொல்லிட்டு, ஒரிஜ்னல் சென்னைக்கு ஓடிவந்துறார்.
டூப்ளீகேட் ரொம்ப திறமையா அவருதான் ஒரிஜ்னல்னு எல்லாரையும் நம்பவைக்கிறார். அதனால ஒரிஜ்னல எல்லாரும் டூப்ளீகேட்டுன்னு நினைக்கிறாங்க. போதும் போதும் நிறுத்துன்னு சொல்றது காதுல விழுது. இருந்தாலும் விடமாட்டேன்.
கிளைமேக்ஸ்ல ஒரு சண்டை இருக்குதுங்க , ஒருத்தர் காலும் தரையில படாது, ஏர்லயே சண்டை. கடைசியா வாலி பார்முளாவுல டூப்ளீகேட், ஒரிஜ்னல் இல்லைங்குற உண்மையே ஷிரேயா கண்டுபிடிச்சுடுவாங்க. அந்தநேரத்துல கரக்ட்டா ஒரிஜ்னல் கண்ணாடியவுடைச்சிகிட்டு வந்துடுவார். ஒரிஜ்னலுக்கும், டூப்ளீகேட்டுக்கும் சண்டை நடக்கும்போது, டூப்ளீகேட் ஷிரேயாவ கத்தியால குத்திடுவாரோன்னு நாம யோசிக்க டைரக்டர் மாத்தி யோசிச்சிருக்கிறார். அந்த சஸ்பென்ச நீங்களே போய் பாருங்க...எது எப்படியோ படத்தோட கிளைமேக்ஸ் சுபம்ங்க..
பாடல்கள் நல்லாயிருக்கு.. ஆனா எங்கேயோ கேட்ட மாதிரியே இருக்கு..
சக்திமான் சூப்பரா டான்ஸ் ஆடுறாருங்க.. கட்டாயம் போய்ப்பாருங்க..
எவ்வளவோ பண்றோம்.. இது பண்ணமாட்டோமா அப்டிங்கிறீங்களா..
யாம்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்...


Thursday, November 1, 2007

கடவுளின் சொந்த நாடு II

திருவனந்தபுரம் ஒரு மிதமான தட்பவெப்ப நிலை உள்ள ஒரு இடம். இங்க எப்ப மழை வரும் , எப்டி வரும் னு எலலாம் சொல்லமுடியாது ஆனா ஒரு வாரத்துக்கு ஏழு நாளாவது மழை பெய்யும்.


மழை மாதிரியே இங்க அடிக்கடி போராட்டங்களும் நடக்கும். ஸ்ட்ரைக் அப்புடிங்குற்த இவுங்க "ஹர்த்தால் " னு சொல்ராங்க. எல்லா கட்சிகளுமே ஹர்த்தால் பண்றத்துக்குன்னே தனி ஆளுங்கள அப்பாயின்ட் பண்ணி
வச்சுருக்காங்க.

அரசு தலைமைச்செயலகத்துக்கு வெளில டெண்டு போட்டு இந்த ஆளுங்க தயாரா இருப்பாங்க, ரெடின்னு சொன்னதும் ரொட மறிச்சு வேலையை ஆரம்பிச்சுடுவாங்க.


தமிழ் திரைப்படங்களுக்கு இங்க நல்ல வரவேற்பு இருக்கு. புதுப்படம் வந்தாக்கூட டிக்கெட் விலையெல்லாம் நியாயமாதான் இருக்கும். டாக்டர் விஜய் நடித்த போக்கிரி 100 நாள் ஓடிச்சுன்னா பாத்துகங்க.. கோயில் திருவிழாவிலெல்லாம் தெரு முழுக்க ஸ்பீக்கர் கட்டி , " டோலு டோலு தான் அடிகுறான்" னு பாட்டப்போட்டு நம்ம காது கிழியுற அளவுக்கு கத்த விடுவாங்க.

திருவனந்தபுரத்துல முக்கியமா பார்க்கவேண்டிய இடங்கள்,




சுவாமி பத்பநாபா கோவில். பேருந்து நிலையத்திலிருந்து 1/2 மைல் தொலைவில் இருக்குகிறது








கோவளம் கடற்கரை.
கேரளாவுல இருக்குற கடற்கரைகள் எல்லாம் ரொம்ப சுத்தமா இருக்கும். இந்த கடற்கரைகளை பார்ப்பதற்காகத்தான் வெளிநாட்டினர் நிறைய பேர் வருகிறார்கள்.
சூரியக்குளியல், மணல்குளியல் எல்லாம் நிறைய பார்க்கலாம். இதே போல் சங்குமுகம், வேலி போன்ற கடற்கரைகளும் பார்க்கவேண்டிய இடங்கள்.




திருவனந்தபுரத்துல ஒரு மிருகக்காட்சி சாலையும் , அருங்காட்சியகமும் இருக்கு.
அரிய விலங்குகளை இங்கு பார்க்கலாம்.






திருவனந்தபுரத்துக்கு இன்னொரு சிறப்பு, இந்திய விண்வெளி ஆய்வுக்கழகம். இஸ்ரோவின் முதல் ராக்கெட் ஏவுதளம் திருவனந்தபுரம் அருகில் உள்ள தும்பா என்ற இட்த்தில் உள்ளது. பெரும்பாலான விஞ்ஞானிகள், நம் அப்துல் கலாம் உட்பட இங்குதான் தன் பணியை தொடங்கியிருக்கிறார்கள்.
"நைக் அப்பாச்சி" என்ற ராக்கெட்டை தும்பாவிலிருந்து விண்ணில் செலுத்துவதற்காக தயார் செய்துகொண்டிருக்கும் படத்தைத்தான் அருகில் பார்க்கிறீர்கள்.



கேரளாவுக்கு சுற்றுலா வந்தீங்கன்னா, கீழே இருக்குற சொற்கள் கொஞ்சம் உதவியா இருக்கும்.


தேனீர் (Tea) :சாயா

சாம்பார் : சாம்பார்
வத்தல்குழம்பு : தீயல்
ரசம் : இரெசம்
பருப்பு : பெருப்பு
மோர்குழம்பு : புளிசேரி.
ஊறுகாய் : அச்சாரம்.
போதும் : மதி
வெங்காயம் : உள்ளீ
சொல் : பறை
கூப்பிடுகிறேன :விளிக்கே
ஆள் : புள்ளி
வேலை : ஜோலி.
இப்போதைக்கு இவ்வளவுதான் சொல்லுவேன். இன்னமும் தெரிஞ்சுக்கனும்னா என்கிட்ட டியுஷன் சேருங்க..

சின்ன சின்ன குறைகள் இருந்தாலும், பொதுவா சொல்லனும்னா திருவனந்தபுரம் ஒரு அருமையான சுற்றுலாத்தலம். நேரம் கிடைக்கும்போது கடவுளிடைய சொந்த நாட்டுக்கு கண்டிப்பா வாங்க..

Tuesday, October 30, 2007

கடவுளின் சொந்த நாடு - 1

கடவுளின்ட சொந்தநாடு என்ட கேரளா' கொஞ்சம் புரிஞ்சுருக்கும்னு நினைக்கிறேன். வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு என்று நாம் சொல்வது போல், கேரளாவை கடவுளின் சொந்த நாடு என்கிறார்கள்.

நான் 2006 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் திருவனந்தபுரத்துக்கு வந்தேன். கூட வேலை பார்கிற மலையாள நண்பர்களுடன் பேசி, சீக்கிரமே மலையாளம் கத்துக்கலாம்னு நினைச்சேன் ஆனா நடந்ததென்னவோ அவர்களெல்லாம் என்னிடம் பேசி ரொம்ப சீக்கிரமே தமிழ் கத்துகிட்டாங்க.

திருவனந்தபுரம்தான் கேரளாவோட தலைநகரம் னு சொல்லிகிறாங்க, ஆனா அதுக்கான அறிகுறிகளை கண்டுபிடிக்கிறது ரொம்ப சிரமம். தம்பானூர் என்ற




இடத்தில்தான் பேருந்து நிலையமும், இரெயில் நிலையமும் இருக்கின்றன. மழை நேரத்துல இந்த இடத்துக்கு வரனும்னா படகுலதான் வரனும். அவ்வளவு பள்ளமான இடம். ஆன இங்க எவ்வளவுதான் மழை பெய்தாலும் கொஞ்சநேரத்திலேயே தண்ணியெல்லாம் ஓடிடும்.

இங்க ஓடுற பேருந்துகளை பார்த்ததுக்கப்புறம்தான் தமிழ்நாட்டுப் பேருந்துகளோட அருமையே புரிஞ்சுது. தலைநகரத்தோட பேருந்து நிலையத்த பார்த்தீங்கன்னா, மீன் மார்கெட் மாதிரியே இருக்கும், அவ்வளவு (அ)சுத்தமாகவும், சத்தமாகவும் இருக்கும்.


அப்புறம் ஒரு முக்கியமான விஷயம், இங்க இருக்குற எல்லாருக்கும் கொஞ்சம் கொழுப்பு அதிகம். ஆமாங்க சமையலுக்கு தேங்காய் எண்ணையை பயன்படுத்துறதால கொழுப்பு சேர்ந்துகிட்டே இருக்கு. வந்த புதுசுல கேரளா அரிசியை நினைச்சால பயமா இருந்தது, ஆனா இப்பெல்லாம் சாதரண அரிசி சாதம் எல்லா இடத்துலேயும் கிடைக்குது.


என்னடா இவன் ஒரே குறையா சொல்லிகிட்டு இருக்கானேன்னு நினைக்கிறீங்களா? .. அடுத்த பதிவில் இங்க இருக்குற நல்ல விஷயங்களை பத்தி சொல்லப்போறேன்.

Monday, October 29, 2007

அறிமுகம்

என்னைப்பற்றி எந்தவித அறிமுகமும் கொடுக்காமல் ஏனோதானோ என்றுதான் இந்த வலைப்பதிவை தொடங்கினேன். ஆனால் இப்போதுதான் இதன் முக்கியத்துவமும் , வலிமையும் எனக்கு புரிகின்றன.

எனது சொந்தவூர் வேளாங்கண்ணி. தற்போது திருவனந்தபுரத்தில் , ஒரு ஆங்கில பத்திரிக்கையின் தொழில்நுட்ப பிரிவில் வேலைப் பார்கிறேன், இவ்வளவுதாங்க நான்.

வலைப்பதிவுகளை எனக்கு அறிமுகம் செய்த விஜய் அவர்களுக்கும், இதை மேன்படுத்துவதற்கு உதவிய மங்களூர் சிவா அவர்களுக்கும் இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

எத்தனையோ சுவையான செய்திகள், காரசாரமான விவாதங்கள் இத்தகைய வலைப்பதிவுகளில் உலா வருகின்றன. என்னுடைய எண்ணங்களை உங்கள்முன் எதிரொலிக்க இந்தக்கண்ணாடியைப் நான் பயன்படுத்தப்போகிறேன். நேரம் கிடைக்கும்போது வந்து முகம் காட்டிச்செல்லுங்கள். அப்படியே என்னையும் கூட்டிச்செல்லுங்கள் உங்கள் வலைப்பயணங்களில்......

நேசமுடன்,

அ.ரூபஸ். (சத்தியமா நான் தமிழ்நாடுதான்)

Friday, October 19, 2007

தொல்லை பேசி



முன் பெஞ்சில் அமர்ந்திருக்கிற நண்பனுக்கு குறுந்தகவலோ, தூரத்தில் இருக்கும் தோழிக்கு புதுப்பாடலின் இசையையோ இனி பள்ளிக்கூடத்திலிருந்து அனுப்ப இயலாது.




பள்ளிக்கூடங்களில் மாணவர்களும், ஆசிரியர்களும் செல் பேசியை பயன்படுத்த தமிழக அரசு தடை விதித்துள்ளது. வரவேற்க வேண்டிய விஷயம். ஆனால் ஆசிரியர்களின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே இதை வெற்றிகரமாக செயல்படுத்த முடியும்.


தலைக்கவசம் அணிய வேண்டுமென்று ஒரு சட்டம் கொண்டுவந்து, குட்டையாக குழப்பினார்களே அதுபோல் இல்லாமல், கொஞ்சம் கடுமையாக நடைமுறைக்கு கொண்டு வந்தால் நலமாயிருக்கும்.

Sunday, October 14, 2007

உறக்கமும், சோம்பலும்

தூக்கம் என்பது கண்களின் தர்மம்
ஆனால் சோம்பல் என்பது ஒருவகையான தற்கொலை

தூக்கத்தில் சொறிந்து கொள்வது மாதிரி
சோம்பலென்பது ஒரு தற்காலிக சுகம்,

விழித்துப் பார்த்தால் அதுவே ரத்தம் கசியும்
ரணமாகவும வாய்ப்பிருக்கிறது,

நேரத்தை ஒத்தி வைக்கும் ஒவ்வொரு நிமிஷத்திலும்
உனது வெற்றி ஒத்திவைக்கப்படுகிறது

நாளை என்று தள்ளிப்போடும் நாளெல்லாம் உன் எதிர்காலம்
இறந்தகாலமாகிக் கொண்டிருக்கிறது.

-கவிஞர் வைரமுத்து
("சிற்பியே உன்னை செதுக்குகிறேன்")

Monday, October 1, 2007

காகங்களின் வருத்தம்


மாலைகளுடன் மனிதர்களின் கூட்டம்
காகங்கள் வருந்துகின்றன..
இன்று காந்தியிடம நெருங்க முடியாதென்பதால்...

காந்தி பிறந்தநாள்


அக்டோபர் இரண்டு மகாத்மாவின் பிறந்தநாள். குடிமக்கள் கொண்டாடுகிறார்கள், குடிமகன்கள் திண்டாடுகிறார்கள் மதுக்கடை கட்டாய விடுமுறை என்பதால். அது போகட்டும்.. என்னைக்கவர்ந்த காந்தியின் பொன்மொழிகளில் சில உங்கள் பார்வைக்காக இதோ...


  • Freedom is not worth having if it does not include the freedom to make mistakes .
  • Hate the sin, love the sinner
  • I object to violence because when it appears to do good, the good is only temporary; the evil it does is permanent
  • An eye for an eye makes the whole world blind
  • You must not lose faith in humanity. Humanity is an ocean, if a few drops of the ocean are dirty, the ocean does not become dirty.
  • The weak can never forgive. Forgiveness is the attribute of the strong

Saturday, September 29, 2007

Microsoft Secret

எல்லாருக்கும் வணக்கம். எனக்கு தெரிந்ததா நான் நினைக்கிற ஒரு விஷயத்த உங்ககிட்ட சொல்லலாம்னு நினைக்கிறேன்.

Microsoft OS ல CON அப்புடின்னு ஒரு Folder உருவாக்க முடியாதுன்னு எல்லாரும் கேள்விப்பட்டிருப்பீங்க, அது உண்மைதான். ஏன் முடியாது என்றால்...

முதன்முதலில் Microsoft ன் DOS ( Disk Operating System) க்கான மென்பொருள் எழுதும்போது கணிப்பொறியின் பாகங்களை குறிப்பதற்காக சில பிரத்தியேகமான பெயர்களை( Reserved Names) பயன்படுத்தினர். உதாரணமாக தட்டச்சுப்பலகையும்( Keyboard), திரையும்( Screen) CON அதாவது Console எனவும், Printer, PRN எனவும் குறிக்கப்பட்டன.


நாம் DOS ல் புதிய கோப்பு (File) தொடங்குவதற்கு COPY CON என்ற கட்டளையை ( Internal Command) பயன்படுத்துவோம். இங்கு Copy என்பது நகல் எடுப்பதை குறிக்கிறது. Con என்பது தட்டச்சுப்பலகையையும் , திரையையும் குறிக்கிறது. நாம் தட்டச்சுப்பல்கையில் என்ன தட்டச்சு(Type) செய்கின்றோமோ அதை திரையில் எதிரொலிக்க (Echo) வேண்டும் என்பதே அந்த கட்டளையின் பொருள்.


CON என்ற பிரத்தியேக வார்த்தை இதுபோன்ற கட்டளைகளில் பயன்படுத்தப்படுவதாலும, ஏற்கனவே குறிக்கப்பட்டிருப்பதாலும்தான் நம்மால் CON என்ற பெயரில் புதிதாக ஒரு Folder ரை உருவாக்க முடியவில்லை என்பது எனது கருத்து.


Printer ரை குறிக்கும் PRN என்ற பெயரில் கூட புதிதாக ஒரு Folder ரை உருவாக்க முடியாது. முயற்சித்துப் பாருங்கள். தவறு ஏதேனும் இருப்பின் சுட்டிக்காட்டுங்கள்.

Thursday, September 27, 2007

காணமல் போன கைபேசி

கல்லூரியின் இறுதியாண்டில் Project க்காக அப்பாவிடம் எவ்வளவு ...முடியுமோ அவ்வளவு சுரண்டிட்டு நண்பர்கள் எல்லாரும் சென்னையில், மூச்சு திணரும் திநகரில், குடியேறினோம். அருகருகெ உள்ள 3 ரூம்களில் 10 பேருக்குமேல் தங்கியிருந்தோம். ஒரு நாள் பக்கத்து ரூமிலிருந்த தெரிந்தவர் ஒருவர் உள்ளெ வந்து எங்களுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது புதுசா ஒரு ஆள் உள்ளே வந்தார், எங்களிடம் பேசிக்கொண்டிருந்தவர் அவரைப்பார்த்து சிரிக்க, நாங்களும் சிரித்தோம். வந்தவர் பக்கத்து ரூம்மெட்டின் ஓரமாக அமர்ந்து நாங்கள் பேசுவதை கவனித்துக்கோண்டிருந்தார். கொஞ்ச நேரம் கழித்து அந்த ஆள் என் நண்பனிடம் , boss உங்க மொபைல குடுங்க ஒரு மெசஜ் அனுப்பிட்டு தர்ரென்னு கேட்க , அவனும் குடுத்தான், மெசஜ அனுப்பிட்டு அந்த யோக்கியனும் மொபைல உடனே திருப்பிக் குடுத்தார். கொஞ்ச நேரத்துக்கு அப்புறம் மறுபடியும் அதே அப்ளிக்கெஷன போட்டாரு அந்த யோக்கியவான், நம்மாளும் நம்பி குடுத்தான், கண் சிமிட்டுர நேரத்துக்குள்ள வெளில ஓடிப்போய் கதவ தாழ் போட்டுட்டு , செல்லை தூக்கிக்கிட்டு பறந்து போய்டாரு அந்த யோக்கியவான். பக்கத்து ரூம் பசங்க வந்து கதவ திறந்துவிட்டு போய் பார்த்தா திநகரில் ஒரே தல தலயா தெரியுது.. அவ்வளவு கூட்டம் .. திரும்பி வந்து எங்ககிட்ட பேசிக்கிட்டிருந்த பக்கத்து ரூம்காரரிடம் வந்தவன் உங்க friend ஆ ன்னு கேட்டோம், அவர் அதே கேள்வியை எங்கள பார்த்து கேட்டார். அப்பதான் தெரிஞ்சுது வந்தவன யாருக்கும் தெரியாதுன்னு. இதுல பெரிய காமெடி என்னன்னா, 2 மணி நெரம் கழிச்சு அந்த நம்பருக்கு போன் பண்ணினோம், ஹலோ அப்புடின்னதும், "boss தபபா எடுத்துக்காதீங்க, இந்த செல்ல நான் use பண்ணிகிறேன் நீங்க வேற வாங்கிக்கங்க" ன்னு சொல்லிட்டு போனை கட் பண்ணிட்டான் , அந்த புண்ணியவான். சிரிக்கிறதா, அழுவுறதான்னு தெரியாம இப்படித்தான் நின்னான் எங்க friend
http://tykesontrikes.com/images/profound_sadness.gif.
வடிவேலு சொல்லுறமாதிரி நூதனமாத்தான்யா திருடுராங்கெ.. ரூம் போட்டு யோசிப்பாங்களோ.... உங்களுக்கு இந்த நிலமை வராம கொஞ்சம்
உஷாரா இருங்க...

Wednesday, September 26, 2007

உலககோப்பை - இருபது இருபது

Heroes one and all

போனா வராது போழுதுபட்டா கிடைக்காது ங்குற மாதிரி, இதோ நாம் கொண்டாடுவதற்கு ஏற்ற நேரம், இந்தியாவின் கைகளில் உலககோப்பை.இந்நேரத்தில் நமது அணியை மனமார வாழ்த்துவோம். இது தொடர்பாக எனக்கு வந்த இமெயில் வெற்றிக்கான காரணங்கள் குறித்து டோனி யின் உரை இடம்பெற்றிருந்தது. அதிலிருந்து சில... ( ரவி சாஸ்திரியும், டோனியும் - கற்பனை)

ரவி: வாழ்த்துக்கள டோனி. இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் யார் என்று நினைக்கிறீர்க்ள்?

டோனி:( யோசிக்காமல்) இந்த வெற்றிக்கு முழுமுதற் காரணம் , அஜித் அகர்கர்தான்.

ரவி: அவர் விளையாடவே இல்லையே?

டோனி: அதுதான் முக்கியகாரணம். அவர் மட்டும் விளையாடியிருந்தா அவரோட 4 ஓவரிலேயே பாக்கிஸ்தான் ஜெயிச்சுருக்கும். .....சத்தமாக Thanks to Agarkar.

ரவி: ya u r right. யாருக்கு நீங்க நன்றி சொல்ல விரும்புகிறீர்கள்?

டோனி: சச்சின், டிராவிட் மற்றும் கங்குலி.

ரவி: Oh.. I am very proud of you. அவர்களுடைய வழிகாட்டுதலுக்காகவா?

டோனி: அட போங்க சார், முனு பேரும் இருந்திருந்தா லீக்குலேயெ வெளில வந்திருப்போம். அப்புறம் எங்க விட்டுலைல கல்லவிட்டு அடிப்பாங்கே... இப்ப எங்க வீடு தப்பிச்சுது..

ரவி: ok fine. இந்திய ரசிகர்களுக்கு என்ன சொல்ல விரும்புரிங்க?

டோனி: மக்களே... இத எல்லாரும் ரொம்ப நாளைக்கு ஞாபகம வச்சுக்கணும். மறந்துர கூடாது. அடுத்த மேட்சில தோற்றா கூட திட்டக்கூடாது, நாங்க பாவம....

கோப்பையை வாங்கிக்கொண்டு வந்து அகர்கரை கட்டி அணைக்கிறார் டோனி.


Sunday, September 23, 2007

நல்ல செய்தி

கீழ இருக்குற Prayer ஐ படிச்சுட்டு ஒரு முடிவுக்கு வ்ந்திராதீங்க. நானும் உங்கள மாதிரிதான். சரி விஷையத்துக்கு வர்ரேன். இந்த காலத்துல
பணக்கார பொண்ணுங்க எல்லாம் வெளிநாட்டு மாப்புளைங்களை கல்யாணம் செய்துகிராங்க.. படிச்ச பொண்ணுங்க Software மாப்ளைதான் வேணும்னு அடம் புடிக்கிறாங்க... Teacher பொண்ணுங்க வாத்தியாரா பாத்துகுதுங்க.. அப்ப நாமெல்லாம் என்னதான் செய்யுரதுன்னு பொலம்பிகிட்டு இருக்கிற எல்லாருக்கும் ஒரு Good News.
ரஷ்யாவுல பிறப்பு விகிதம் கம்மியாயிகிட்டெ வருதாம். இத சரி பண்றதுக்கு சரியான ஆட்கள் இந்தியர்கள் தான் கண்டுபிடிச்சுட்டாங்க. ரஷ்ய பொண்ணுங்களுக்கு இந்திய மாப்புளைங்களை தேட ஆரம்பிச்சுருக்காங்களாம்.
ரஷ்யா நம்க்கு எவ்ளவோ உதவி இருக்காங்க. அதனால போனாபோவுது இந்த உதவியை நாம செய்வோம். நிங்க என்ன நெனைக்கிறிங்க?...... ஹலோ application வாங்குனிங்கன்னா மறக்காம எனக்கு ஒன்னு அனுப்புங்க...

Prayer for you

நண்பர்களுக்கு என் முதல் வணக்கம். முதன்முதலா ஆரம்பிக்கிரோம் , ஒரு Prayer சொல்லி தொடங்குவோமா..

இறைவா என்னை உன் அமைதியின் கருவியாக மாற்றியருளும்.

எங்கு பகை உள்ளதோ அங்கு அன்பையும்,

எங்கு மன வருத்தமுள்ளதோ அங்கு மன்னிப்பையும்,

எங்கு ஐயம் உள்ளதோ அங்கு நம்பிக்கையும்,

எங்கு இருள் உள்ளதோ அங்கு ஒளியையும்,

எங்கு துன்பம் உள்ளதோ அங்கு இன்பத்தையும்

யான் பரப்பிட அருள் தாரும்.

நான் ஆறுதலை தேடி அலைவதை விட்டுவிட்டு

மற்றவர்களுக்கு ஆறுதலை கொடுக்க விழைவேனாக..

என்னை பிறர் நெசிக்க வேண்டும் என்பதை விட்டுவிட்டு

நான் பிறரை நெசிக்க கற்றுக்கொள்வேனாக..

மற்றவர்கள் என்னை புரிந்துகொள்ள வேண்டும் என்பதை விட்டுவிட்டு

மற்றவர்களை நான் புரிந்துகொள்ள விழைவேனாக..

நிங்கள் எந்த சமையத்தை சார்ந்தவராக இருந்தாலும் பரவாயில்லை. உங்கள் முருகனிடமோ, அல்லாவிடமோ, இயெசுவிடமோ இப்படி கெட்டுப்பாருங்கள். அன்றைய தினம் சுகமாய் அமையும்.

Thursday, September 20, 2007

Thiruvalluvar at Kanniyakumari

திருக்குறள் மறந்து போய் எத்தனையோ நாள் Class. க்கு வெளில நின்னுருக்கொம்.. ஆனா இவரை யார் இப்படி நிக்கச்சொன்னது?... என்ன கொடுமை சார் இது?