
ஆனால் சோம்பல் என்பது ஒருவகையான தற்கொலை
தூக்கத்தில் சொறிந்து கொள்வது மாதிரி
சோம்பலென்பது ஒரு தற்காலிக சுகம்,
விழித்துப் பார்த்தால் அதுவே ரத்தம் கசியும்
ரணமாகவும வாய்ப்பிருக்கிறது,
நேரத்தை ஒத்தி வைக்கும் ஒவ்வொரு நிமிஷத்திலும்
உனது வெற்றி ஒத்திவைக்கப்படுகிறது
நாளை என்று தள்ளிப்போடும் நாளெல்லாம் உன் எதிர்காலம்
இறந்தகாலமாகிக் கொண்டிருக்கிறது.
-கவிஞர் வைரமுத்து
("சிற்பியே உன்னை செதுக்குகிறேன்")