Tuesday, December 25, 2007

அஞ்சலி

அந்த கடலலைக்கு தெரியாது

தான் காலனைச் சுமக்கிறோம் என்று..

அந்த காலனுக்கும் தெரியாது

கணக்கில் எத்தனை சேர்ந்ததென்று...


கடலலையில் கரைந்து,

நிலத்தில் புதைந்துபோன

சகோதர , சகோதரிகளுக்கு

என் கண்ணீர் அஞ்சலி...

Saturday, December 22, 2007

மசால் தோசை

ரத்தினம் நீண்ட நேரமாக சுந்தரத்தை கவனித்துக்கொண்டிருக்கிறார். ஏன் இப்படி செய்கிறான் என்று புரியவில்லை. சுந்தரத்தை இந்த ஹோட்டலில் வேலைக்குச் சேர்த்து இரண்டு நாட்கள்தான் ஆகிறது. மீண்டும் மீண்டும் அவன் அதே பொல செய்துகொண்டிருக்க பொருமையிழந்தவராய் எழுந்து அவனை சமயலறைக்கு அழைத்துச்சென்றார்.

"ஏம்பா சுந்தரம், ஏன் இப்படி பண்ற" என்று சற்று கோபமாகவே கேட்டார்.
"என்ன சார் , என்ன சொல்ரீங்கன்னு புரியலையே" என்று பணிவாக பதிலளித்தான்.

"பின்ன என்னப்பா சாப்பிட வர்ரவங்ககிட்ட எல்லாம் , நம்ம ஹோட்டலில் இல்லாத ஐட்டமா சொல்ர, ஏன் இப்படி பண்ற? உன்னையெல்லாம் வேலைக்கு சேர்த்தேன் பாரு என்னை சொல்லனும்" என்று பொரிந்துதள்ளினார்.


"சார் கோவிச்சுக்காதீங்க.. இதுல ஒரு வியாபார தந்திரம் இருக்கு. அதாவது , இப்ப நான் போய் சாப்பிட வர்ரவங்ககிட்ட என்ன வேணும் னு கேட்டா, அவுங்க ப்திலுக்கு என்ன இருக்குன்னு கேட்கிறாங்க,

இட்லி, தோசை, நெய்ரோஸ்ட், ஊத்தப்பம், பொங்கல், பூரி, சப்பாத்தி, வடை, போண்டா அப்புடின்னு மூச்சு விடாம சொல்லிமுடிச்சதுக்கப்புறம், அவுங்க மசால் தோசை இருக்கான்னு இல்லாத ஒன்ன கேட்கிறாங்க. சாப்பிட வர்ரதுல பத்து பேருக்கு ஏழு பேரு இப்படித்தான் இருக்காங்க.. அதனாலதான் நான் முதல்லையே இல்லாத ஐட்டத்த இருக்குறமாதிரி சொல்றேன். நான் சொல்லிமுடிச்சத்துக்கப்புறம் என்னோட லிஸ்ட்ல இல்லாதத கேட்பாங்க.. அப்ப நம்ம வேலை கொஞ்சம் ஈஸியாயிடுது."
என்று புன்னகையுடன் விளக்கமளித்தான்.

ம்ம்.. கெட்டிகாரன் என்று முதுகில் தட்டி கொடுத்தார் ரத்தினம்.

Tuesday, December 18, 2007

மீண்டும் வாராதோ அந்நாள்...

பதினோரு மணிக்கெல்லாம் அறையை சுத்தம் செய்ய தொடங்கிவிட்டார்கள் செந்திலும், ஜெகனும். கட்டில்களையும், பெட்டிகளையும் அப்புறப்படுத்திக் கொண்டிருந்தனர் தியாகுவும் , கலைஞரும். கார்த்தியும், ராஜு வும் அறைகளுக்குச் சென்று அழைப்பு விடுத்துக்கொண்டிருந்தனர். இதில் எதிலும் கலந்துகொள்ளாமல் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தேன் நான்..


சும்மா இப்படி மசமசன்னு உட்கார்ந்து இருக்காம போய் குளி என்று அதட்டிய அரவிந்த் கையோடு அழைத்தும் சென்றான். குளித்து வரும்போது அறையை அழுக்கு குறைந்த போர்வைகளால் அலங்கரித்திருந்தனர் விமலும், சிவசுவும்.

விஜயகுமார் ஒரு முக்காலியின்மேல் ஒரு பெட்டியை வைத்து பிரித்துக்கொண்டிருந்தான். தாத்தா செந்தில் புதிதாக வாங்கிவந்த ஆடைகளை எடுத்துக்கொடுத்தான். எதுக்குடா இதெல்லாம் என்று உதட்டளவில் சொன்னாலும் , உள்ளுக்குள் பரவாயில்லையே பசங்க நல்லததான் வாங்கியிருக்காங்க என்ற எண்ணம். ஆடைகளை அணிவித்து, அழகுபடுத்தினார்கள். புகைப்படக்காரன் குமார் தயாரானான்.


பெட்டியிலிருந்து பிரித்த கேக்கை மெழுகுதிரியால் அலங்கரித்தனர் கடலை பிரபுவும், பாலாஜியும். கேக்கையும் , என்னையும் வைத்து முதல் புகைப்படம் எடுத்தான் குமார். சீனியர், ஜீனியர் எல்லாரும் வந்துசேர்ந்தனர். புத்தகப்புழுக்கள் சரவணனும், சூசையும் கூட ஆஜரானார்கள். பலியாகப்போற ஆடுபோல் பரிதாபமாய் நின்றேன்.. வாங்கபோகும் அடிகளை நினைத்து முதுகு இப்போதே வலித்தது. நேரமாயிடுச்சு வெட்டுங்க என்று திருநாவுக்கரசு குரல் கொடுக்க.. ரெட்டிகாரு மெழுகுதிரிகளை பற்ற வைத்தார்.



குனிந்து மெழுகுதிரிகளை அணைக்கும்போது படபட வென முதுகில் மொத்தியவர்களில் ராம்பிரகாஷ் ம் ஒருவன். பிறந்தநாள் வாழ்த்துக்களை எல்லோரும் பாட , பக்கத்தில் நின்ற செந்திலுக்கும், ஜெகனுக்கும் முதல் கேக்கை கொடுத்தேன். கால்வாசியை எடுத்துக்கொண்டு மீதியை என் முகத்தில் பூசினார்கள. வந்திருந்த அணைவருக்கும் பகிர்ந்து கொடுக்கும் வேலையை சிவசுவும், கலைஞரும் கவனிக்க, சதிஷ் சாப்பிடுவதிலையே குறியாயிருந்தான்.


பரிசுகள் கொடுத்து புகைப்படங்கள் எடுத்தனர். அரவிந்தின் பாட்டிலிருந்து தப்பிக்க cd யிலிருந்து பாட்டு போட்டனர். snake டான்ஸ் பாலாஜின் சிறப்பு நடனம் அரங்கேரியது. பாசக்கார பிள்ளைகள் என்று நான் மெய்சிலிர்த்த நேரத்தில், தன் வேலையை காட்ட ஆரம்பித்தார்கள். தம்பி புது சொக்காவ குடுத்துருப்பா என்று கழட்டி வாங்கிக்கொண்டனர்.

என்னையெல்லாம் அடிச்சு நீ ரவுடின்னு பேர் வாங்கப்போறியான்னு நினைச்சிகிட்டு , அடிங்கடா.. அடிங்க னு போருக்கு தயாரானேன்.. தக்காளி , முட்டை இன்னும் என்னன்னெவோ... ஒன்னுகூட தரையில விழல.. குறிபாத்து அடிக்கிறானுங்க .. அன்பு , அன்புன்னு சொல்லிட்டு வழியுற தக்காளியையும், முட்டையையும் எடுத்து மூஞ்சில பூசுராரு CSC சிவா.. அந்த அழகான மூஞ்ச தனியா குளொசப் ல ஒரு போட்டோ வேற..


காலையில காலேஜ் க்குப் போனதும், டேஸ்காலர் பாசக்கார பசங்க எல்லாம் வந்து போதும் போதும் ங்குற அளவுக்கு குடுத்தாங்க.. நல்லவங்க மாதிரியே பேசி, வலிக்கிறமாதிரி அடிச்ச அண்ணாமலை, அவர் நண்பர் நரிகிருஷ்ணன், ரூபன், அருண், மாமா கார்த்தி , சத்தியப்பிரியன், முகுந்தன், நல்லு, மகேஷ், திரு, gpm, பிரவீன், கரீம், பாலா, ஸ்ரீதர், பட்டி,மணவாளன்....... இப்படி எல்லோரும் என்னருகில் நிற்கிறார்கள் புன்னகையுடன் இந்த புகைப்படத்தில்....

ம்ம்ம்... ஒவ்வொரு பிறந்தநாளின் போதும் , உங்களின் வாழ்த்துக்களையும் , கொடுத்த பரிசுகளையும்.. வாங்கிய அடிகளையும் ..அசைபோடுகின்றேன் இந்த புகைப்படங்களின் வழியாக..

மீண்டும் வருமா இதுபொன்றதொரு நாள்....



Thursday, November 29, 2007

ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம்

150000 இது சென்செக்ஸ் புள்ளிகளின் எண்ணிக்கை அல்ல. வளரும் இந்தியாவின் வயிறு சம்பந்தப்பட்ட ஒரு பிரச்சினை. ஆம் ,இந்தியாவில் 1997 முதல் 2007 வரை தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் மொத்த எண்ணிக்கை சுமார் 150000.

கடன் சுமை, நஷ்டம் இரண்டுமே இன்றைய விவசாயத்தின் முக்கிய அங்கங்களாகிவிட்டன.

எனது சொந்தவூர் நாகை மாவட்டத்தில் உள்ளது. பருவமழையும், காவிரியும்தான் இங்கு விவசாயத்திற்கான முக்கிய மூலங்கள். காவிரி கதை எல்லாருக்கும் தெரிந்ததுதான். ஆனால் சில வருடங்களாக பருவமழையும் பொய்த்துவிட்டது. தேவையான நேரத்தில் ஒரு சொட்டு கூட பெய்வதில்லை. நன்றாக கதிர்வரும்போது பேய் மழை பெய்கிறது.

இதெல்லாம் ஒருபுறமிருக்க, தற்போது உள்ள முக்கிய பிரச்சினை விவசாய வேலைகளுக்கு ஆட்கள் வரமறுக்கிறார்கள் என்பதுதான். ஆம் கட்டிட வேலைகளுக்குச்சென்றால் இதைவிட இருமடங்கு வருமானம் கிடைப்பதால் விவசாய வேலைகளை தவிர்த்துவிடுக்கிறார்கள். எனவே பெரும்பாலான நிலங்கள் தரிசு நிலங்களாகவே இருக்கின்றன. ( யாராவது டாடா கம்பெனி காரங்ககிட்ட சொல்லுங்கப்பா..)..

இன்னும் கொஞ்சநாட்களில் அரிசி, தக்காளி, கீரை இதையெல்லாம் பெப்சி, கோக் மாதிரி புட்டிகளில் அடைச்சு வெளிநாட்டுகாரங்க நம்மகிட்ட விற்கப்போகிறார்கள்.

சரி இப்ப அதுக்கு என்னங்குறிங்களா? .. விக்ரமன் படத்துல வர்ர மாதிரி ஒரே பாட்டுல எல்லா தரிசு நிலத்தையும் விளைநிலமாகவோ.. இல்ல நஷ்டத்த லாபமாகவோ நம்மால மாத்தமுடியாது. ஏதோ நம்மாள முடிஞ்சது,

வெளியூர்ல, வெளிநாடுகள்ல நல்லா சம்பாதிக்கிற நாம , ஊர்ல இருக்குற நிலத்தையெல்லாம் வித்துடுங்கன்னு அப்பாக்கள டார்ச்சர் பண்ணாம இருக்கலாம்.

விவசாயத்துக்காக கொஞ்சம் செலவு செய்யலாம்.
வேற ஏதாவது யோசனை இருந்தால் சொல்லுங்க..

Monday, November 26, 2007

சேதி தெரியுமா?

மலையாளத்துல சாக்லேட் னு ஒரு படம் வந்து சக்கைபோடு போட்டுகிட்டு இருக்குங்க. அந்த படத்துல ஒரு புது விஷயத்தை சொல்ராங்க.


அதாவது மகளீர் கல்லூரியில் ஒரே ஒரு ஆண் மட்டும் படிக்கலாம்னு சட்டம் இருக்குதாம்.( நம்ம நாட்டுலதான்...) அதுக்கு கல்லூரி முதல்வரோட அனுமதி மட்டும் இருந்தால் போதுமாம். இதுதான் படத்தோட கரு.


இந்தபுது சட்டத்தோட கருணையால பிரித்திவிராஜ்க்குஅந்த யோகம் கிடைக்குது.
அதுக்கப்ப்புறம் காலேஜ்ல நடக்குற விஷயங்ள், இத வச்சு திரைக்கதையை அமைச்சுருக்காங்க.. மொத்தத்துல படம் நல்லாயிருக்கு.

தமிழக இளைஞர்களின் எதிபார்ப்புக்கு ஏற்றமாதிரி ரெண்டு கதாநாயகிகள் நடிச்சிருக்காங்க. தமிழ்ல சீக்கிரம் எதிபார்க்கலாம். ஆயிரம் ஆண்கள் இருக்குற இடத்துல இருந்துறலாம், ஆனா ரெண்டு பொண்ணுங்க இருக்குகிற இடத்துல இருக்கமுடியாதுங்குறத ( சத்தியமா நான் சொல்லலைங்க..) பிரித்திவிராஜ் படம் முழுக்க அனுபவிக்கிறார்.

ம்ம்.. நமக்குத்தான் குடுத்து வைக்கல வரப்போற பசங்களுக்காவது பயன்படட்டுமேன்னு தான் உங்க எல்லார்கிட்டேயும் இத சோன்னேன்.
உண்மையாவே இப்படி ஒரு சட்டம் இருக்குதான்னு விசாரிச்சுப்பாருங்க..

Thursday, November 15, 2007

ஏமாற்றம்



இந்தமுறையும்

ஏமாந்துபோனேன்,

அருகில் இருந்த ரயில்பெட்டி

நகர்ந்தபோது..

நகர்வது என்னுடையது

என்றெண்ணி..

Monday, November 12, 2007

எவ்வளவோ பண்றோம்.. அழகிய தமிழ்மகன்


தீபாவளிக்கு அடுத்த நாள் நண்பர் ஒருவருடன் அழகிய தமிழ்மகன் படம் பார்க்கப்போயிருந்தேன். இனிய தளபதி, இதய தளபதி, இளைய தளபதி, டாக்டர் விஜய் அப்புடின்னு பேர் போட்டதுலேருந்து படம் முழுக்க இந்தமாதிரி நிறைய காமெடிகள்.


ஓட்டப்பந்தயத்துல எல்லா மெடலையும் தானே வாங்குற வீரர் விஜய். ஒரு பந்தயத்துல, கூட ஓடுற ஒருத்தருக்காக ( ஸ்ரீமன்) முதலிடத்த விட்டுக்கொடுக்கிறார் விஜய். இத பார்த்தவுடனே உலகத்துலேயே இல்ல இல்ல தமிழ்நாட்டுலேயே பெரிய பணக்காரரோட பொண்ணு கதாநாயகிக்கு இவரு மேல காதல் வந்துடுது. . . .அதுக்காகத்தானே அந்த சீனே..


அப்புறம்தான் படத்தோட கதையே ஆரம்பிக்குது. பின்னாடி நடக்கப்போற சில விஷயங்கள் விஜய்க்கு, முன்னாடியே கண்ணாடி மாதிரி தெரியுது.. ( plz பொருத்துக்கங்க..). அதுனால விஜய் ரொம்ப டிஸ்டர்பு ஆகிறார். மனநல மருத்துவர் ருத்ரன் , இதுல கவலைப்படுறத்துக்கு ஒன்னும் இல்ல, உங்களுக்குள்ள ஒரு அபார சக்தி இருக்கு. இப்படி உங்களுக்கு தோன்ற விஷயங்கள் எல்லாம் கண்டிப்பா நடக்கும்னு சொல்லிறார். அதேபோல சக்திமானுக்கு (அதாங்க நம்ம விஜய் ) தோனுன ரெண்டு விஷயங்கள் உண்மையாவே நடந்துடுது...


இதுக்கிடையில விஜயோட காதல் வீட்டுக்கு தெரியவந்து எல்லாரும் கல்யாணத்துக்கு சம்மதிக்கிறாங்க. அந்தநேரத்துல விஜய்க்கு இன்னொரு விஷயம் தோனுது. அதாவது கதாநாயகிய இவரே கத்தியால குத்துறமாதிரி. இத யார்கிட்டேயும் சொல்லமுடியாம ஊரைவிட்டு மும்பைக்கு போறாரு.


அங்க போனவுடனே இவரு கண்ணையே இவரால நம்பமுடியல, ஆமாங்க.. அச்சு அசல் இவர்மாதிரியே இன்னொருத்தர், நடு ரோட்டுல பத்துபேர அடிச்சு, துவச்சுகிட்டு இருக்கிறார். ஒரிஜ்னல் டூப்ளீகேட்ட பிடிக்கிறத்துக்காக ஓடுறார், அதுக்குள்ள அவரு ஒரு கார்ல ஏறிப்போயிடுறார். நின்னுகிட்டு இருந்த ஒரிஜ்னல் மேல லாரி மோதிடுது.


அதுக்கப்புறம் நீங்க யூகிச்சமாதிரியே டூப்ளீகேட் சென்னைக்கு போறாரு. இரெயில்ல போகும்போது நமிதாகிட்ட ஜல்சா பண்ணிட்டு, அவுங்க முழிக்கிறத்துக்குள்ள காணாம போயிடுறார். இதெல்லாம் வச்சு இவரு ரவுடின்னு முடிவுக்கு வ்ந்துடாதீங்க. டூப்ளீகேட் பேங்குல வேலை பார்கிறாராம். இவரோட முக்கியமான டயலாக்தான் தலைப்புல நீங்க பார்த்தது, எவ்வளவோ பண்றோம் , இது பண்ணமாட்டோமா?

நாலு நாளா ஒரிஜ்னல தேடி அலைஞ்ச ஷிரேயா, டூப்ளீகேட்ட ஒரிஜ்னல்னு நினைச்சு வீட்டுக்கு கூட்டிட்டு போயிடுறாங்க..( என்னவொரு டிவிஸ்டு பார்த்தீங்களா) ஒருஜ்னலோட டைரிய கண்டுபிடுச்ச டூப்ளீகேட் அவர மாதிரியே நடிக்க ஆரம்பிக்கிறார்.
இந்தநேரத்துல மும்பையில ஒரு பெரிய ஆஸ்பத்திரியில ஓசியில வைத்தியம் பார்த்துக்கிட்டு இருக்காங்க ஒரிஜ்னல் விஜய்க்கு. டாக்டர் ஒருமாசத்துக்கு ரெஸ்டு எடுக்கனும், ரிஸ்கு எடுக்ககூடாதுன்னு சொல்றார், ஆனா ரிஸ்கு எடுக்குறதெல்லாம் எனக்கு ரஸ்கு சாப்புடுற மாதிரின்னு சொல்லிட்டு, ஒரிஜ்னல் சென்னைக்கு ஓடிவந்துறார்.
டூப்ளீகேட் ரொம்ப திறமையா அவருதான் ஒரிஜ்னல்னு எல்லாரையும் நம்பவைக்கிறார். அதனால ஒரிஜ்னல எல்லாரும் டூப்ளீகேட்டுன்னு நினைக்கிறாங்க. போதும் போதும் நிறுத்துன்னு சொல்றது காதுல விழுது. இருந்தாலும் விடமாட்டேன்.
கிளைமேக்ஸ்ல ஒரு சண்டை இருக்குதுங்க , ஒருத்தர் காலும் தரையில படாது, ஏர்லயே சண்டை. கடைசியா வாலி பார்முளாவுல டூப்ளீகேட், ஒரிஜ்னல் இல்லைங்குற உண்மையே ஷிரேயா கண்டுபிடிச்சுடுவாங்க. அந்தநேரத்துல கரக்ட்டா ஒரிஜ்னல் கண்ணாடியவுடைச்சிகிட்டு வந்துடுவார். ஒரிஜ்னலுக்கும், டூப்ளீகேட்டுக்கும் சண்டை நடக்கும்போது, டூப்ளீகேட் ஷிரேயாவ கத்தியால குத்திடுவாரோன்னு நாம யோசிக்க டைரக்டர் மாத்தி யோசிச்சிருக்கிறார். அந்த சஸ்பென்ச நீங்களே போய் பாருங்க...எது எப்படியோ படத்தோட கிளைமேக்ஸ் சுபம்ங்க..
பாடல்கள் நல்லாயிருக்கு.. ஆனா எங்கேயோ கேட்ட மாதிரியே இருக்கு..
சக்திமான் சூப்பரா டான்ஸ் ஆடுறாருங்க.. கட்டாயம் போய்ப்பாருங்க..
எவ்வளவோ பண்றோம்.. இது பண்ணமாட்டோமா அப்டிங்கிறீங்களா..
யாம்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்...


Thursday, November 1, 2007

கடவுளின் சொந்த நாடு II

திருவனந்தபுரம் ஒரு மிதமான தட்பவெப்ப நிலை உள்ள ஒரு இடம். இங்க எப்ப மழை வரும் , எப்டி வரும் னு எலலாம் சொல்லமுடியாது ஆனா ஒரு வாரத்துக்கு ஏழு நாளாவது மழை பெய்யும்.


மழை மாதிரியே இங்க அடிக்கடி போராட்டங்களும் நடக்கும். ஸ்ட்ரைக் அப்புடிங்குற்த இவுங்க "ஹர்த்தால் " னு சொல்ராங்க. எல்லா கட்சிகளுமே ஹர்த்தால் பண்றத்துக்குன்னே தனி ஆளுங்கள அப்பாயின்ட் பண்ணி
வச்சுருக்காங்க.

அரசு தலைமைச்செயலகத்துக்கு வெளில டெண்டு போட்டு இந்த ஆளுங்க தயாரா இருப்பாங்க, ரெடின்னு சொன்னதும் ரொட மறிச்சு வேலையை ஆரம்பிச்சுடுவாங்க.


தமிழ் திரைப்படங்களுக்கு இங்க நல்ல வரவேற்பு இருக்கு. புதுப்படம் வந்தாக்கூட டிக்கெட் விலையெல்லாம் நியாயமாதான் இருக்கும். டாக்டர் விஜய் நடித்த போக்கிரி 100 நாள் ஓடிச்சுன்னா பாத்துகங்க.. கோயில் திருவிழாவிலெல்லாம் தெரு முழுக்க ஸ்பீக்கர் கட்டி , " டோலு டோலு தான் அடிகுறான்" னு பாட்டப்போட்டு நம்ம காது கிழியுற அளவுக்கு கத்த விடுவாங்க.

திருவனந்தபுரத்துல முக்கியமா பார்க்கவேண்டிய இடங்கள்,




சுவாமி பத்பநாபா கோவில். பேருந்து நிலையத்திலிருந்து 1/2 மைல் தொலைவில் இருக்குகிறது








கோவளம் கடற்கரை.
கேரளாவுல இருக்குற கடற்கரைகள் எல்லாம் ரொம்ப சுத்தமா இருக்கும். இந்த கடற்கரைகளை பார்ப்பதற்காகத்தான் வெளிநாட்டினர் நிறைய பேர் வருகிறார்கள்.
சூரியக்குளியல், மணல்குளியல் எல்லாம் நிறைய பார்க்கலாம். இதே போல் சங்குமுகம், வேலி போன்ற கடற்கரைகளும் பார்க்கவேண்டிய இடங்கள்.




திருவனந்தபுரத்துல ஒரு மிருகக்காட்சி சாலையும் , அருங்காட்சியகமும் இருக்கு.
அரிய விலங்குகளை இங்கு பார்க்கலாம்.






திருவனந்தபுரத்துக்கு இன்னொரு சிறப்பு, இந்திய விண்வெளி ஆய்வுக்கழகம். இஸ்ரோவின் முதல் ராக்கெட் ஏவுதளம் திருவனந்தபுரம் அருகில் உள்ள தும்பா என்ற இட்த்தில் உள்ளது. பெரும்பாலான விஞ்ஞானிகள், நம் அப்துல் கலாம் உட்பட இங்குதான் தன் பணியை தொடங்கியிருக்கிறார்கள்.
"நைக் அப்பாச்சி" என்ற ராக்கெட்டை தும்பாவிலிருந்து விண்ணில் செலுத்துவதற்காக தயார் செய்துகொண்டிருக்கும் படத்தைத்தான் அருகில் பார்க்கிறீர்கள்.



கேரளாவுக்கு சுற்றுலா வந்தீங்கன்னா, கீழே இருக்குற சொற்கள் கொஞ்சம் உதவியா இருக்கும்.


தேனீர் (Tea) :சாயா

சாம்பார் : சாம்பார்
வத்தல்குழம்பு : தீயல்
ரசம் : இரெசம்
பருப்பு : பெருப்பு
மோர்குழம்பு : புளிசேரி.
ஊறுகாய் : அச்சாரம்.
போதும் : மதி
வெங்காயம் : உள்ளீ
சொல் : பறை
கூப்பிடுகிறேன :விளிக்கே
ஆள் : புள்ளி
வேலை : ஜோலி.
இப்போதைக்கு இவ்வளவுதான் சொல்லுவேன். இன்னமும் தெரிஞ்சுக்கனும்னா என்கிட்ட டியுஷன் சேருங்க..

சின்ன சின்ன குறைகள் இருந்தாலும், பொதுவா சொல்லனும்னா திருவனந்தபுரம் ஒரு அருமையான சுற்றுலாத்தலம். நேரம் கிடைக்கும்போது கடவுளிடைய சொந்த நாட்டுக்கு கண்டிப்பா வாங்க..

Tuesday, October 30, 2007

கடவுளின் சொந்த நாடு - 1

கடவுளின்ட சொந்தநாடு என்ட கேரளா' கொஞ்சம் புரிஞ்சுருக்கும்னு நினைக்கிறேன். வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு என்று நாம் சொல்வது போல், கேரளாவை கடவுளின் சொந்த நாடு என்கிறார்கள்.

நான் 2006 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் திருவனந்தபுரத்துக்கு வந்தேன். கூட வேலை பார்கிற மலையாள நண்பர்களுடன் பேசி, சீக்கிரமே மலையாளம் கத்துக்கலாம்னு நினைச்சேன் ஆனா நடந்ததென்னவோ அவர்களெல்லாம் என்னிடம் பேசி ரொம்ப சீக்கிரமே தமிழ் கத்துகிட்டாங்க.

திருவனந்தபுரம்தான் கேரளாவோட தலைநகரம் னு சொல்லிகிறாங்க, ஆனா அதுக்கான அறிகுறிகளை கண்டுபிடிக்கிறது ரொம்ப சிரமம். தம்பானூர் என்ற




இடத்தில்தான் பேருந்து நிலையமும், இரெயில் நிலையமும் இருக்கின்றன. மழை நேரத்துல இந்த இடத்துக்கு வரனும்னா படகுலதான் வரனும். அவ்வளவு பள்ளமான இடம். ஆன இங்க எவ்வளவுதான் மழை பெய்தாலும் கொஞ்சநேரத்திலேயே தண்ணியெல்லாம் ஓடிடும்.

இங்க ஓடுற பேருந்துகளை பார்த்ததுக்கப்புறம்தான் தமிழ்நாட்டுப் பேருந்துகளோட அருமையே புரிஞ்சுது. தலைநகரத்தோட பேருந்து நிலையத்த பார்த்தீங்கன்னா, மீன் மார்கெட் மாதிரியே இருக்கும், அவ்வளவு (அ)சுத்தமாகவும், சத்தமாகவும் இருக்கும்.


அப்புறம் ஒரு முக்கியமான விஷயம், இங்க இருக்குற எல்லாருக்கும் கொஞ்சம் கொழுப்பு அதிகம். ஆமாங்க சமையலுக்கு தேங்காய் எண்ணையை பயன்படுத்துறதால கொழுப்பு சேர்ந்துகிட்டே இருக்கு. வந்த புதுசுல கேரளா அரிசியை நினைச்சால பயமா இருந்தது, ஆனா இப்பெல்லாம் சாதரண அரிசி சாதம் எல்லா இடத்துலேயும் கிடைக்குது.


என்னடா இவன் ஒரே குறையா சொல்லிகிட்டு இருக்கானேன்னு நினைக்கிறீங்களா? .. அடுத்த பதிவில் இங்க இருக்குற நல்ல விஷயங்களை பத்தி சொல்லப்போறேன்.

Monday, October 29, 2007

அறிமுகம்

என்னைப்பற்றி எந்தவித அறிமுகமும் கொடுக்காமல் ஏனோதானோ என்றுதான் இந்த வலைப்பதிவை தொடங்கினேன். ஆனால் இப்போதுதான் இதன் முக்கியத்துவமும் , வலிமையும் எனக்கு புரிகின்றன.

எனது சொந்தவூர் வேளாங்கண்ணி. தற்போது திருவனந்தபுரத்தில் , ஒரு ஆங்கில பத்திரிக்கையின் தொழில்நுட்ப பிரிவில் வேலைப் பார்கிறேன், இவ்வளவுதாங்க நான்.

வலைப்பதிவுகளை எனக்கு அறிமுகம் செய்த விஜய் அவர்களுக்கும், இதை மேன்படுத்துவதற்கு உதவிய மங்களூர் சிவா அவர்களுக்கும் இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

எத்தனையோ சுவையான செய்திகள், காரசாரமான விவாதங்கள் இத்தகைய வலைப்பதிவுகளில் உலா வருகின்றன. என்னுடைய எண்ணங்களை உங்கள்முன் எதிரொலிக்க இந்தக்கண்ணாடியைப் நான் பயன்படுத்தப்போகிறேன். நேரம் கிடைக்கும்போது வந்து முகம் காட்டிச்செல்லுங்கள். அப்படியே என்னையும் கூட்டிச்செல்லுங்கள் உங்கள் வலைப்பயணங்களில்......

நேசமுடன்,

அ.ரூபஸ். (சத்தியமா நான் தமிழ்நாடுதான்)

Friday, October 19, 2007

தொல்லை பேசி



முன் பெஞ்சில் அமர்ந்திருக்கிற நண்பனுக்கு குறுந்தகவலோ, தூரத்தில் இருக்கும் தோழிக்கு புதுப்பாடலின் இசையையோ இனி பள்ளிக்கூடத்திலிருந்து அனுப்ப இயலாது.




பள்ளிக்கூடங்களில் மாணவர்களும், ஆசிரியர்களும் செல் பேசியை பயன்படுத்த தமிழக அரசு தடை விதித்துள்ளது. வரவேற்க வேண்டிய விஷயம். ஆனால் ஆசிரியர்களின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே இதை வெற்றிகரமாக செயல்படுத்த முடியும்.


தலைக்கவசம் அணிய வேண்டுமென்று ஒரு சட்டம் கொண்டுவந்து, குட்டையாக குழப்பினார்களே அதுபோல் இல்லாமல், கொஞ்சம் கடுமையாக நடைமுறைக்கு கொண்டு வந்தால் நலமாயிருக்கும்.

Sunday, October 14, 2007

உறக்கமும், சோம்பலும்

தூக்கம் என்பது கண்களின் தர்மம்
ஆனால் சோம்பல் என்பது ஒருவகையான தற்கொலை

தூக்கத்தில் சொறிந்து கொள்வது மாதிரி
சோம்பலென்பது ஒரு தற்காலிக சுகம்,

விழித்துப் பார்த்தால் அதுவே ரத்தம் கசியும்
ரணமாகவும வாய்ப்பிருக்கிறது,

நேரத்தை ஒத்தி வைக்கும் ஒவ்வொரு நிமிஷத்திலும்
உனது வெற்றி ஒத்திவைக்கப்படுகிறது

நாளை என்று தள்ளிப்போடும் நாளெல்லாம் உன் எதிர்காலம்
இறந்தகாலமாகிக் கொண்டிருக்கிறது.

-கவிஞர் வைரமுத்து
("சிற்பியே உன்னை செதுக்குகிறேன்")

Monday, October 1, 2007

காகங்களின் வருத்தம்


மாலைகளுடன் மனிதர்களின் கூட்டம்
காகங்கள் வருந்துகின்றன..
இன்று காந்தியிடம நெருங்க முடியாதென்பதால்...

காந்தி பிறந்தநாள்


அக்டோபர் இரண்டு மகாத்மாவின் பிறந்தநாள். குடிமக்கள் கொண்டாடுகிறார்கள், குடிமகன்கள் திண்டாடுகிறார்கள் மதுக்கடை கட்டாய விடுமுறை என்பதால். அது போகட்டும்.. என்னைக்கவர்ந்த காந்தியின் பொன்மொழிகளில் சில உங்கள் பார்வைக்காக இதோ...


  • Freedom is not worth having if it does not include the freedom to make mistakes .
  • Hate the sin, love the sinner
  • I object to violence because when it appears to do good, the good is only temporary; the evil it does is permanent
  • An eye for an eye makes the whole world blind
  • You must not lose faith in humanity. Humanity is an ocean, if a few drops of the ocean are dirty, the ocean does not become dirty.
  • The weak can never forgive. Forgiveness is the attribute of the strong

Saturday, September 29, 2007

Microsoft Secret

எல்லாருக்கும் வணக்கம். எனக்கு தெரிந்ததா நான் நினைக்கிற ஒரு விஷயத்த உங்ககிட்ட சொல்லலாம்னு நினைக்கிறேன்.

Microsoft OS ல CON அப்புடின்னு ஒரு Folder உருவாக்க முடியாதுன்னு எல்லாரும் கேள்விப்பட்டிருப்பீங்க, அது உண்மைதான். ஏன் முடியாது என்றால்...

முதன்முதலில் Microsoft ன் DOS ( Disk Operating System) க்கான மென்பொருள் எழுதும்போது கணிப்பொறியின் பாகங்களை குறிப்பதற்காக சில பிரத்தியேகமான பெயர்களை( Reserved Names) பயன்படுத்தினர். உதாரணமாக தட்டச்சுப்பலகையும்( Keyboard), திரையும்( Screen) CON அதாவது Console எனவும், Printer, PRN எனவும் குறிக்கப்பட்டன.


நாம் DOS ல் புதிய கோப்பு (File) தொடங்குவதற்கு COPY CON என்ற கட்டளையை ( Internal Command) பயன்படுத்துவோம். இங்கு Copy என்பது நகல் எடுப்பதை குறிக்கிறது. Con என்பது தட்டச்சுப்பலகையையும் , திரையையும் குறிக்கிறது. நாம் தட்டச்சுப்பல்கையில் என்ன தட்டச்சு(Type) செய்கின்றோமோ அதை திரையில் எதிரொலிக்க (Echo) வேண்டும் என்பதே அந்த கட்டளையின் பொருள்.


CON என்ற பிரத்தியேக வார்த்தை இதுபோன்ற கட்டளைகளில் பயன்படுத்தப்படுவதாலும, ஏற்கனவே குறிக்கப்பட்டிருப்பதாலும்தான் நம்மால் CON என்ற பெயரில் புதிதாக ஒரு Folder ரை உருவாக்க முடியவில்லை என்பது எனது கருத்து.


Printer ரை குறிக்கும் PRN என்ற பெயரில் கூட புதிதாக ஒரு Folder ரை உருவாக்க முடியாது. முயற்சித்துப் பாருங்கள். தவறு ஏதேனும் இருப்பின் சுட்டிக்காட்டுங்கள்.

Thursday, September 27, 2007

காணமல் போன கைபேசி

கல்லூரியின் இறுதியாண்டில் Project க்காக அப்பாவிடம் எவ்வளவு ...முடியுமோ அவ்வளவு சுரண்டிட்டு நண்பர்கள் எல்லாரும் சென்னையில், மூச்சு திணரும் திநகரில், குடியேறினோம். அருகருகெ உள்ள 3 ரூம்களில் 10 பேருக்குமேல் தங்கியிருந்தோம். ஒரு நாள் பக்கத்து ரூமிலிருந்த தெரிந்தவர் ஒருவர் உள்ளெ வந்து எங்களுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது புதுசா ஒரு ஆள் உள்ளே வந்தார், எங்களிடம் பேசிக்கொண்டிருந்தவர் அவரைப்பார்த்து சிரிக்க, நாங்களும் சிரித்தோம். வந்தவர் பக்கத்து ரூம்மெட்டின் ஓரமாக அமர்ந்து நாங்கள் பேசுவதை கவனித்துக்கோண்டிருந்தார். கொஞ்ச நேரம் கழித்து அந்த ஆள் என் நண்பனிடம் , boss உங்க மொபைல குடுங்க ஒரு மெசஜ் அனுப்பிட்டு தர்ரென்னு கேட்க , அவனும் குடுத்தான், மெசஜ அனுப்பிட்டு அந்த யோக்கியனும் மொபைல உடனே திருப்பிக் குடுத்தார். கொஞ்ச நேரத்துக்கு அப்புறம் மறுபடியும் அதே அப்ளிக்கெஷன போட்டாரு அந்த யோக்கியவான், நம்மாளும் நம்பி குடுத்தான், கண் சிமிட்டுர நேரத்துக்குள்ள வெளில ஓடிப்போய் கதவ தாழ் போட்டுட்டு , செல்லை தூக்கிக்கிட்டு பறந்து போய்டாரு அந்த யோக்கியவான். பக்கத்து ரூம் பசங்க வந்து கதவ திறந்துவிட்டு போய் பார்த்தா திநகரில் ஒரே தல தலயா தெரியுது.. அவ்வளவு கூட்டம் .. திரும்பி வந்து எங்ககிட்ட பேசிக்கிட்டிருந்த பக்கத்து ரூம்காரரிடம் வந்தவன் உங்க friend ஆ ன்னு கேட்டோம், அவர் அதே கேள்வியை எங்கள பார்த்து கேட்டார். அப்பதான் தெரிஞ்சுது வந்தவன யாருக்கும் தெரியாதுன்னு. இதுல பெரிய காமெடி என்னன்னா, 2 மணி நெரம் கழிச்சு அந்த நம்பருக்கு போன் பண்ணினோம், ஹலோ அப்புடின்னதும், "boss தபபா எடுத்துக்காதீங்க, இந்த செல்ல நான் use பண்ணிகிறேன் நீங்க வேற வாங்கிக்கங்க" ன்னு சொல்லிட்டு போனை கட் பண்ணிட்டான் , அந்த புண்ணியவான். சிரிக்கிறதா, அழுவுறதான்னு தெரியாம இப்படித்தான் நின்னான் எங்க friend
http://tykesontrikes.com/images/profound_sadness.gif.
வடிவேலு சொல்லுறமாதிரி நூதனமாத்தான்யா திருடுராங்கெ.. ரூம் போட்டு யோசிப்பாங்களோ.... உங்களுக்கு இந்த நிலமை வராம கொஞ்சம்
உஷாரா இருங்க...

Wednesday, September 26, 2007

உலககோப்பை - இருபது இருபது

Heroes one and all

போனா வராது போழுதுபட்டா கிடைக்காது ங்குற மாதிரி, இதோ நாம் கொண்டாடுவதற்கு ஏற்ற நேரம், இந்தியாவின் கைகளில் உலககோப்பை.இந்நேரத்தில் நமது அணியை மனமார வாழ்த்துவோம். இது தொடர்பாக எனக்கு வந்த இமெயில் வெற்றிக்கான காரணங்கள் குறித்து டோனி யின் உரை இடம்பெற்றிருந்தது. அதிலிருந்து சில... ( ரவி சாஸ்திரியும், டோனியும் - கற்பனை)

ரவி: வாழ்த்துக்கள டோனி. இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் யார் என்று நினைக்கிறீர்க்ள்?

டோனி:( யோசிக்காமல்) இந்த வெற்றிக்கு முழுமுதற் காரணம் , அஜித் அகர்கர்தான்.

ரவி: அவர் விளையாடவே இல்லையே?

டோனி: அதுதான் முக்கியகாரணம். அவர் மட்டும் விளையாடியிருந்தா அவரோட 4 ஓவரிலேயே பாக்கிஸ்தான் ஜெயிச்சுருக்கும். .....சத்தமாக Thanks to Agarkar.

ரவி: ya u r right. யாருக்கு நீங்க நன்றி சொல்ல விரும்புகிறீர்கள்?

டோனி: சச்சின், டிராவிட் மற்றும் கங்குலி.

ரவி: Oh.. I am very proud of you. அவர்களுடைய வழிகாட்டுதலுக்காகவா?

டோனி: அட போங்க சார், முனு பேரும் இருந்திருந்தா லீக்குலேயெ வெளில வந்திருப்போம். அப்புறம் எங்க விட்டுலைல கல்லவிட்டு அடிப்பாங்கே... இப்ப எங்க வீடு தப்பிச்சுது..

ரவி: ok fine. இந்திய ரசிகர்களுக்கு என்ன சொல்ல விரும்புரிங்க?

டோனி: மக்களே... இத எல்லாரும் ரொம்ப நாளைக்கு ஞாபகம வச்சுக்கணும். மறந்துர கூடாது. அடுத்த மேட்சில தோற்றா கூட திட்டக்கூடாது, நாங்க பாவம....

கோப்பையை வாங்கிக்கொண்டு வந்து அகர்கரை கட்டி அணைக்கிறார் டோனி.


Sunday, September 23, 2007

நல்ல செய்தி

கீழ இருக்குற Prayer ஐ படிச்சுட்டு ஒரு முடிவுக்கு வ்ந்திராதீங்க. நானும் உங்கள மாதிரிதான். சரி விஷையத்துக்கு வர்ரேன். இந்த காலத்துல
பணக்கார பொண்ணுங்க எல்லாம் வெளிநாட்டு மாப்புளைங்களை கல்யாணம் செய்துகிராங்க.. படிச்ச பொண்ணுங்க Software மாப்ளைதான் வேணும்னு அடம் புடிக்கிறாங்க... Teacher பொண்ணுங்க வாத்தியாரா பாத்துகுதுங்க.. அப்ப நாமெல்லாம் என்னதான் செய்யுரதுன்னு பொலம்பிகிட்டு இருக்கிற எல்லாருக்கும் ஒரு Good News.
ரஷ்யாவுல பிறப்பு விகிதம் கம்மியாயிகிட்டெ வருதாம். இத சரி பண்றதுக்கு சரியான ஆட்கள் இந்தியர்கள் தான் கண்டுபிடிச்சுட்டாங்க. ரஷ்ய பொண்ணுங்களுக்கு இந்திய மாப்புளைங்களை தேட ஆரம்பிச்சுருக்காங்களாம்.
ரஷ்யா நம்க்கு எவ்ளவோ உதவி இருக்காங்க. அதனால போனாபோவுது இந்த உதவியை நாம செய்வோம். நிங்க என்ன நெனைக்கிறிங்க?...... ஹலோ application வாங்குனிங்கன்னா மறக்காம எனக்கு ஒன்னு அனுப்புங்க...

Prayer for you

நண்பர்களுக்கு என் முதல் வணக்கம். முதன்முதலா ஆரம்பிக்கிரோம் , ஒரு Prayer சொல்லி தொடங்குவோமா..

இறைவா என்னை உன் அமைதியின் கருவியாக மாற்றியருளும்.

எங்கு பகை உள்ளதோ அங்கு அன்பையும்,

எங்கு மன வருத்தமுள்ளதோ அங்கு மன்னிப்பையும்,

எங்கு ஐயம் உள்ளதோ அங்கு நம்பிக்கையும்,

எங்கு இருள் உள்ளதோ அங்கு ஒளியையும்,

எங்கு துன்பம் உள்ளதோ அங்கு இன்பத்தையும்

யான் பரப்பிட அருள் தாரும்.

நான் ஆறுதலை தேடி அலைவதை விட்டுவிட்டு

மற்றவர்களுக்கு ஆறுதலை கொடுக்க விழைவேனாக..

என்னை பிறர் நெசிக்க வேண்டும் என்பதை விட்டுவிட்டு

நான் பிறரை நெசிக்க கற்றுக்கொள்வேனாக..

மற்றவர்கள் என்னை புரிந்துகொள்ள வேண்டும் என்பதை விட்டுவிட்டு

மற்றவர்களை நான் புரிந்துகொள்ள விழைவேனாக..

நிங்கள் எந்த சமையத்தை சார்ந்தவராக இருந்தாலும் பரவாயில்லை. உங்கள் முருகனிடமோ, அல்லாவிடமோ, இயெசுவிடமோ இப்படி கெட்டுப்பாருங்கள். அன்றைய தினம் சுகமாய் அமையும்.

Thursday, September 20, 2007

Thiruvalluvar at Kanniyakumari

திருக்குறள் மறந்து போய் எத்தனையோ நாள் Class. க்கு வெளில நின்னுருக்கொம்.. ஆனா இவரை யார் இப்படி நிக்கச்சொன்னது?... என்ன கொடுமை சார் இது?