Wednesday, September 24, 2008

வாழ்த்துக்கள்

வலையுலகத்திற்கு என் அன்பான வணக்கங்கள். காணமல் போன பேனாவை கண்டுபிடிப்பதற்குள் மூன்று மாதங்கள் கரைந்துவிட்டன. இடைப்பட்ட காலங்களில் ஏகப்பட்ட நிகழ்வுகள். அதில் முக்கியமானது,
செப்டம்பர் 11 அன்று பங்குச்சந்தை நிபுனரான திரு.மங்களூர் சிவா, பூங்கொடி என்ற நிறுவனத்தின் மொத்த பங்குகளையும் தன்வசமாக்கிக்கொண்டார். வாழ்த்துக்கள் சிவா சார்.
தனியா இருந்த போது ஊர், ஊரா போய், வேண்டியவங்க, வேண்டாதவங்கன்னு பாரப்ட்சம் பார்க்காமல், பஜ்ஜியும், சொஜ்ஜியும் தின்னுட்டு வந்த நீங்க, அதேமாதிரி இனிமே எங்க எல்லாரையும் கூப்பிட்டு விருந்து வைப்பீங்கன்னு நம்புகிறேன்.

நீங்க காலை, மதியம் மற்றும் இரவு வேலைகளில் மட்டும் சமைப்பதாகவும், சமையல் மணம் சுற்றியுள்ள தெருக்களில் பரவுவதாகவும் ஏஜன்சி செய்திகள் தெரிவிக்கின்றன.. உண்மையா சிவா சார்...

உங்கள் இருவரின் இல்லறமும் சிறக்க மீண்டும் என் நல்வாழ்த்துக்கள்....