Saturday, April 19, 2008

உன்னையெல்லாம் திருத்தமுடியாது...

கபில்தேவோட ICL க்கு போட்டியா, இந்திய கிரிக்கெட் வாரியம் IPL ன்னு பங்காளி சண்டையை ஆரம்பிச்சபோது அது ஒரு பெரிய விஷயமா தெரியல. ஆனா பெரிய பணக்காரர்களிடம் டீம்களை விற்று, விளையாடுபவர்களை ஏலம் விட்டபோது இது விளையாட்டல்ல , வியாபாரம் என்று புரிந்தது.

இந்த விஷயம் தெரிந்ததும், ரட்சகன் படத்துல நாகார்ஜுனுக்கு நரம்பு புடைக்குமே , அதுமாதிரி என்க்கும் என் நண்பர்களுக்கும் உடம்பெல்லாம் நரம்பு புடைத்தது. நாமெல்லாம் வாயை திறந்துகிட்டு டிவி பார்க்கிறதுனாலதான் இவங்கல்லாம் இப்படி பண்றாங்க என்று கொதித்தார் ஒரு நண்பர். IPL மேட்ச நாம யாரும் பார்க்ககூடாதுன்னு பேசி முடிவு பண்ணினோம். கிட்டத்தட்ட சபதம்ன்னு வச்சுக்கலாம்.

நாட்கள் ந....க.....ர்....ந்....த....ன. ஏப்ரல் 18 மாலை 6 மணிக்கெல்லாம் எல்லாரும் டிவி ரூமுக்கு வந்தாச்சு. "செம கலர்ஃபுல்லா இருக்குல்ல" இது ஒரு நண்பர். "என்ன கூட்டம் பார்த்தீங்களா" இது நான். " மேட்சு எப்போ ஆரம்பிக்கும் " இது கொதித்து எழுந்தவர். இப்படி நாங்களெல்லாம் பேசிக்கொண்டிருக்கும் போது , பின்புறத்திலிருந்து யாரோ என் தலையில் குட்டினார்கள். திரும்பிப்பார்ததால் சாட்சாத் என் மனசாட்சியேதான்.. உன்னையேல்லாம் திருத்தமுடியாது என்று மீண்டும் நறுக்கென்று என் தலையில் குட்டிவிட்டு அருகில் அமர்ந்து மேட்ச் பார்க்கத்தொடங்கியது என் மனசாட்சி...