Saturday, May 30, 2009

எங்களையும் கவனியுங்கள்...

சில தினங்களுக்கு முன்பு பெங்களளூர் நண்பர்களிடமிருந்து செல்பேசியில் அழைப்பு வந்தது. முன்பெல்லாம் வாரம் இருமுறை பேசும் நண்பர்கள், இப்போதல்லாம் மாதம் ஒருமுறைக்கூட பேசுவதில்லை . பொருளாதார பின்னடைவுன்னு காரணம் சொல்லி காச மிச்சம் புடிக்கிறானுங்க.. கஞ்சன்ஸ்..
ஏன் நீ பண்ண வேண்டியதுதானே அப்புடின்னு என்னை கேட்குறானுங்க.. நான் என்னங்க பண்றது , கேரளாவுல அவுட் கோயிங் போகாதே!
சரி, விஷயத்துக்கு வருவோம். சாதாரண விசாரிப்புகளுக்கு பிறகு, மோகனிடம் " என்னடா வீட்டுல கல்யாணத்துக்கு பொண்ணு பாக்கிறதா சொன்னியே என்னாச்சு" என்றேன். சோகமான குரலில் பதில் வந்தது, " அத ஏன் மாப்புள கேட்குற, ஒரு ஜோசியக்காரன் இடையில புகுந்து, இப்போ நேரம் சரியில்லைன்னு சொல்லி காரியத்த கெடுத்துட்டான்" என்றான். "இந்த காலத்துலயுமா இப்படி நடக்குது, சரி என்ன பண்ணப்போற" என்றேன் . " வேற என்ன செய்யுறது, அடுத்த மாசம் ஊருக்கு போய் அந்த ஜோசியக்காரனுக்கு ஏதாவது பணம் குடுத்து அவன் வாயை அடைக்கனும். இங்க குளிர் தாங்கமுடியல மாப்புள " என்று கொட்டினான் அவன் வேதனையை.

"சரி , உனக்கு என்னாச்சு, வீட்டுல ரொம்ப கட்டாயப்படுத்துறதா சொன்னீயே, ரெடியாயிடுச்சா" என்று தன் பங்குக்கு என் சோகத்தை கிளறினான் இன்னொரு நண்பன் சீனு. " ரெண்டு மாசத்துக்கு முன்னாடி, போன் மேல போன் போட்டு கல்யாணம் பண்ணனும்னு டார்ச்சர் பண்ணினாங்க. எல்லாரும் போல நானும் எனக்கு இப்ப என்ன அவசரம், நான் அத பண்ணனும், இத பண்ணனும் அப்புடின்னு கொஞ்சம் ஃபிகு பண்ணீட்டேன். அவ்வள்வுதான் அதுக்கப்புறம் கண்டுக்கவே மாட்டேன்றாங்க.. நானும் சாப்பாடு சரியில்ல, உடம்பு வீணாப்போகுது அப்புடி, இப்புடின்னு என்னென்னமோ சொல்லிப்பாக்கிறேன். ம்கூம்.. காதுலையே வாங்கமாட்டேன்றாங்க.. "

"அதனாலதான் சொல்றேன், மக்களே! வீட்டுல ஏதாவது கல்யாண பேச்சு எடுத்தாங்கன்னா , உடனே ok சொல்லிடுங்க, கொஞ்சம் ஃபிகு பண்ணினா, அவ்வளவுதான், கெஞ்ச வச்சுருவானுங்க.." எங்கள் கதை இப்படியிருக்க, இன்னொரு நண்பன் , " உங்க வீடாவது பரவாயில்ல, எங்க வீட்டுல இத பத்தி பேசவே மாட்டேன்றாங்க.. எங்க அப்பாவுக்கு நானே மொட்ட கடுதாசி போடப்போறேன், உங்க பையன் இங்க ஒரு பொண்ணுகூட சுத்துறான்னு.. அப்பவாவது ஏதாவது ரியாக்சன் இருக்கான்னு பார்ப்போம்." என்று இப்படி அலுத்துக்கொண்டான்

"கூட படிச்ச பொண்ணுங்க எல்லாம் அவுங்க பசங்களோட LKG அட்மிஷனுக்கு Interview attend பண்ணுதுங்க, முடியெல்லாம் கொட்ட ஆரம்பிச்சுட்டுது , இன்னும் நமக்கொரு முடிவு கிடைக்கல" என்று பெருமூச்சோடு பேசி முடித்தோம்.

யோசிச்சு பார்த்ததுல, கல்யாணம் பண்றதுனால முக்கியமான பெனிஃபிட் என்னென்னா, Missed call குடுத்து கடன் கேட்டு நச்சரிக்கிற பேர்வழிகளிடம், பேஃம்லி ஆயிட்டேன் மாப்புள, ரொம்ப சாரி ன்னு சொல்லி எஸ்கெப் ஆயிடலாம்.
என்ன சரிதானே!...

4 comments:

Thiyagarajan said...

\\முடியெல்லாம் கொட்ட ஆரம்பிச்சுட்டுது , இன்னும் நமக்கொரு முடிவு கிடைக்கல"\\

Vidunga Boss Straighta Sweet 60th yr marriage "panni"kkalam

Thiyagarajan said...

Enakku oru annan irukkan. Naan enna panrathu??????????????????????????????????????????????????

மங்களூர் சிவா said...

/
Thiyagarajan said...

Enakku oru annan irukkan. Naan enna panrathu??????????????????????????????????????????????????
/

என்ன தியாகராஜா உங்க ஊட்டுல பேசட்டுமா நானு???
:))))))))))))

மே. இசக்கிமுத்து said...

ரொம்ப சரியா சொன்னீங,,,