Tuesday, October 30, 2007

கடவுளின் சொந்த நாடு - 1

கடவுளின்ட சொந்தநாடு என்ட கேரளா' கொஞ்சம் புரிஞ்சுருக்கும்னு நினைக்கிறேன். வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு என்று நாம் சொல்வது போல், கேரளாவை கடவுளின் சொந்த நாடு என்கிறார்கள்.

நான் 2006 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் திருவனந்தபுரத்துக்கு வந்தேன். கூட வேலை பார்கிற மலையாள நண்பர்களுடன் பேசி, சீக்கிரமே மலையாளம் கத்துக்கலாம்னு நினைச்சேன் ஆனா நடந்ததென்னவோ அவர்களெல்லாம் என்னிடம் பேசி ரொம்ப சீக்கிரமே தமிழ் கத்துகிட்டாங்க.

திருவனந்தபுரம்தான் கேரளாவோட தலைநகரம் னு சொல்லிகிறாங்க, ஆனா அதுக்கான அறிகுறிகளை கண்டுபிடிக்கிறது ரொம்ப சிரமம். தம்பானூர் என்ற




இடத்தில்தான் பேருந்து நிலையமும், இரெயில் நிலையமும் இருக்கின்றன. மழை நேரத்துல இந்த இடத்துக்கு வரனும்னா படகுலதான் வரனும். அவ்வளவு பள்ளமான இடம். ஆன இங்க எவ்வளவுதான் மழை பெய்தாலும் கொஞ்சநேரத்திலேயே தண்ணியெல்லாம் ஓடிடும்.

இங்க ஓடுற பேருந்துகளை பார்த்ததுக்கப்புறம்தான் தமிழ்நாட்டுப் பேருந்துகளோட அருமையே புரிஞ்சுது. தலைநகரத்தோட பேருந்து நிலையத்த பார்த்தீங்கன்னா, மீன் மார்கெட் மாதிரியே இருக்கும், அவ்வளவு (அ)சுத்தமாகவும், சத்தமாகவும் இருக்கும்.


அப்புறம் ஒரு முக்கியமான விஷயம், இங்க இருக்குற எல்லாருக்கும் கொஞ்சம் கொழுப்பு அதிகம். ஆமாங்க சமையலுக்கு தேங்காய் எண்ணையை பயன்படுத்துறதால கொழுப்பு சேர்ந்துகிட்டே இருக்கு. வந்த புதுசுல கேரளா அரிசியை நினைச்சால பயமா இருந்தது, ஆனா இப்பெல்லாம் சாதரண அரிசி சாதம் எல்லா இடத்துலேயும் கிடைக்குது.


என்னடா இவன் ஒரே குறையா சொல்லிகிட்டு இருக்கானேன்னு நினைக்கிறீங்களா? .. அடுத்த பதிவில் இங்க இருக்குற நல்ல விஷயங்களை பத்தி சொல்லப்போறேன்.

3 comments:

மங்களூர் சிவா said...

//
மலையாள நண்பர்களுடன் பேசி, சீக்கிரமே மலையாளம் கத்துக்கலாம்னு நினைச்சேன்
//
எதாவது ஒரு சேச்சியை தேத்த வேண்டியதுதானே
:-))))))

மங்களூர் சிவா said...

//
தம்பானூர் என்ற
இடத்தில்தான் பேருந்து நிலையமும், இரெயில் நிலையமும் இருக்கின்றன.
//
தம்பானூர் வந்திட்டு போன் பன்னா வந்திருவியா??

:-)))))))))

ரூபஸ் said...

மங்களூர் சிவா said...
//எதாவது ஒரு சேச்சியை தேத்த வேண்டியதுதானே//

முயற்சி பண்ணிக்கிட்டுத்தான் இருக்கேன்..

ஏதாவது டிப்ஸ் குடுங்க சார்..