Friday, May 16, 2008

இணைய இல்லறம்

"எப்போ பாத்தாலும் உங்க அப்பா, அம்மா வுக்கு மட்டும் சப்போர்ட் பண்ணாதீங்க. நான் சொல்றதையும் கொஞ்சம் கேளுங்க"
******************
"கேட்குறீங்க இல்லன்னு சொல்லலை. ஆனா இந்த காதுல வாங்கி அந்த காதுல விட்ருவீங்க. சம்பளத்தை உங்க அப்பாகிட்ட குடுத்துரீங்க. அதை நான் தப்புன்னு சொல்லலை. ஆனா, நம்ம குழந்தைக்கு ஒரு பால் டப்பா வாங்கனும்னா கூட உங்க அப்பாகிட்டதான் கையேந்த வேண்டியிருக்கு".
******************
"ம்ம். குடுக்குறாரு ஆனா அதுக்குமுன்னாடி ஏன், எதுக்குன்னு ஆயிரத்தெட்டு கேள்வி கேக்குறாரு. சிக்கனமா இருக்க வேண்டியதுதான், ஆனா உங்க அப்பா பண்றது கஞ்சத்தனம்".
***********************
"வயசானவங்க, அட்ஜஸ்ட் பண்ணிக்கோ, இதையே எத்தனைதடவைதான் சொல்லுவீங்க. என்னோட பொருமைக்கும் ஒரு எல்லை உண்டு".
*********************
"நான் ஏன் எங்க அப்பா வீட்டுக்கு போகனும்? , அவுங்க நிம்மதியை கெடுக்கவா?.. என்ன பேச்சு பேசுரீங்க நீங்க?. அப்புறம் என்னத்துக்கு கல்யாணம் பண்ணிகிட்டீங்க?"
*********************
"ஆமாங்க நான் பேசுறதெல்லாம் உங்களுக்கு சத்தம் போடுறது மாதிரிதான் இருக்கும். குழந்தைக்காக பாத்துகிட்டுருந்த வேலையையும் விட சொன்னீங்க. இப்ப வீட்டு வேலையையும் பாக்கணும், குழந்தையையும் கவனிக்கனும்னா ரொம்ப கஷ்டமா இருக்கு. வேலைக்கு ஒரு ஆளு வைச்சுக்கலாம்னு சொன்னாகூட உங்க அப்பா காதுலையே வாங்கமாட்டேங்குறாரு"
*********************
"ஐயோ! சொல்றத புரிஞ்சுக்குங்க. வேலை செய்யுறத்துக்கு நான் அலுப்பு படலைங்க. குழந்தை தவழ ஆரம்பிச்சுட்டான். ஒவ்வொரு நொடியும் அவனை கவனிச்சுகிட்டே இருக்க வேண்டியிருக்கு. துணி எக்கச்சக்கமா துவைக்க வேண்டியிருக்கு, ஒரு ஆளு துணைக்கு இருந்தா உதவியா இருக்கும்".
*******************
இப்படி அமைதியா இருந்தா என்ன அர்த்தம்?.. நான் பைத்தியம் மாதிரி கத்திகிட்டு இருக்கேன். ஏதாவது பேசுங்க".
*********************
"என்ன செய்யுறதுன்னா?... ஒன்னு நீங்க இங்க வந்து எங்ககூட இருங்க. இல்லைன்னா என்னையும் , குழந்தையையும் உங்ககூட கூட்டிட்டு போயிடுங்க. சரி நேரமாயிடுச்சி குழந்தை முழிச்சுடுவான், போய் சாப்பிட்டு , நல்லா தூங்குங்க, நான் கிளம்புறேன்". என்று வெளிநாட்டில் இருக்கும் கணவனிடம் வெடித்துவிட்டு , Yahoo Messenger ஐ sign out செய்துவிட்டு கிளம்பினார் அந்த இணைய இல்லறத்தின் இல்லத்தரசி.

11 comments:

ரூபன் said...

Its all practically True Pulal.

KARTHIK said...

உண்மதாங்க நம்ம நாட்டுல பெரும்பாலான நடுத்தர வர்க்கத்தின் நிலை இதுதாங்க.

தமிழ் said...

சிலர் உடைய
வாழ்க்கை
இப்படி தான்
இருக்கிறது

ரூபஸ் said...

வாங்க கார்த்திக் மற்றும் திகழ்மிளிர்...

JK said...

இந்த மாதிரி நிகழ்வுகள் ....என்ன சொல்லவருததுனா நிறைய பேர் " தனி குடும்பம் " விரும்பரதை
காட்டுது... கசப்பு தான் என்ன செய்யறது ??

நீங்க தந்த உரைநடை வடிவம் ...நன்றாக இருக்கு

ரூபஸ் said...

ஆமாம் JK தனிக்குடும்பம் மனக்கசப்பை உண்டாக்கும்.
வெளிநாடுகள்ல இருக்குற நிறைய பேர், தன்னோட குழந்தையையே இரண்டு , மூணு வருசம் கழிச்சுத்தான் பார்க்குறாங்க.. என்ன செய்யுறது, தேவைகள் நம்மை தூரத்திற்கு தூரத்திவிடுகிறது.

நையாண்டி நைனா said...

எஞ்சாமீ....
ப்ரவுசிங் சென்டரில் ஒட்டு கேக்க எவ்ளோ மேட்டர் இருக்கு....
இதபோய்... ஒட்டு கேட்டுருக்கிறீர்களே??????

ரூபஸ் said...

நைனா சாமி , நான் மட்டும் கேட்கல , ப்ரவுசிங் சென்டரில் இருந்த அத்தனை பேருமே கேட்டோம். அந்தம்மா அவ்வளவு சத்தமா பேசினாங்க.....

Uma said...

என்ன பண்றது....கணவன்‍,மனைவி எல்லோருக்கும் கஸ்டம்தான்...
yahoo msgr ..வைத்து
வாழ்க்கை நட‌த்துவது

U.P.Tharsan said...

இப்படியும் சில மனிதர்களின் அவல வாழ்க்கை. ஒரு சிறிய நிகழ்ச்சியில் படம் பிடித்து காட்டிய விதம் அருமை.

ரூபஸ் said...

வாங்க தர்ஷன்